கேள்வி :- எனது பெயர் ....... வயது 29 திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் கடந்த வாரந்தொட்டு எனது ஆண் உறுப்பு சரியாக விறைப்படையவில்லை என்பதை என்னால் உணர முடிகின்றது. இதனால் உறவில் திருப்தியின்மையும் ஏற்படுகிறது. இதனை இயற்கை முறையில் குணப்படுத்த முடியுமா?
Wednesday 3 February 2016
இயற்கை முறையில் ஆண்குறி விறைப்புத் தன்மையை அதிகரிக்கலாமா?
Posted by
Unknown on 03:59
Be The First To Comment
Sunday 28 June 2015
சிறுநீர் வெளியேற பிரச்சனையா?
Posted by
Unknown on 04:02
Be The First To Comment
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு நோய் சிறு நீரகத்தில் கல் ஏற்படுவதாகும்.நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகங்கள்.உடலிலுள்ள ரத்தத்தை சுத்திகரித்து, கழிவை சிறுநீராக வெளியேற்றும் முக்கியமான பணியை செய்வது சிறுநீரகங்களாகும்.
சிறுநீர் கற்கள் என்றால் என்ன?
பொதுவாக சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் அடைங்கியுள்ளன. அவற்றுள் கிரிஸ்டல் எனப்படும் உப்புகள்(கால்சியம், ஆக்சலேட்,) ஒன்று சேர்ந்து திடப்பொருள்களாக, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன.
சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.
அறிகுறிகள்
சிறுநீரகக் கல் மிகச்சிறிய அளவில் இருந்து மிகப்பெரியளவு வரை அதாவது ஒரு பந்தின் அளவுவரைக்கூட வளரும்.
பொதுவாக இந்த கற்கள் சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுத்தாதவரை, அறிகுறிகள் வெளியில் தென்படாது.
சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் இந்த கல் உடலில் இருந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படக்கூடும்.
இதனால் சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். கற்களின் வெளிபரப்பு முட்கள் போல் இருந்தால் நீர் பாதையின் சவ்வுப்படலத்தில் உராய்ந்து சிறுநீரில் ரத்தம் வெளிவரக்கூடும், மேலும் முதுகில் வலி ஆரம்பித்து, அது வயிற்றுப்பகுதிக்கு மாற்றமாகுதல்.
அடிவயிற்றில் வலித்தல், தொடைகள், அந்தரங்க உறுப்புகளுகளில் வலி, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் ஆகியவை ஏற்பட்டால் அது சிறுநீரக கல்லாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.
காரணம் என்ன?
சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதற்கு உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம்.
அதேவேளையில் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது.
பரம்பரையால் கூட சிறுநீரகக்கல் பிரச்சனை ஒருவரைத் தாக்கலாம் நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு இந்நோய் பரம்பரையாக வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முக்கியமாக கால்சியம், மக்னீசியம், ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால் இவை உருவாகின்றன. ஒருவருக்கு, ஒருமுறை சிறுநீரகத்தில் கற்கள் தோன்றினால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு(Parathyroid) எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, தொற்றுகள்(infection) காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம்.
தடுக்கும் வழிகள்
சில உணவு வகைகளை தவிர்ப்பதன் மூலமும் தினமும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது மூலமும் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் ஓரளவு தடுக்கலாம்.
அதாவது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணீர் அருந்த வேண்டும். மேலும் பழங்கள் ,காய்கறிகள் ஆகியவற்றை தினசரி உணவுகளில் சேர்த்துகொள்ளவேண்டும்.
உப்பு, இனிப்பு வகைகள், இறைச்சி ஆகியவற்றை குறைத்துகொள்ளவேண்டும். வாழைத்தண்டை உணவில் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது.
ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்களின் ஜூஸ் குடிப்பதன் மூலம், அது சிறுநீரில் அமிலத் தன்மையைக் குறைத்து கல் உருவாவதைத் தடுக்கும்.
சிகிச்சைகள்
பொதுவாக அளவில் சிறியதாக (4 மி.மீ) உள்ள சிறு நீரக கற்கள் தானாகவே வெளியேறிவிடும். அதுவே 6 மி.மீற்றருக்கு மேல் என்றால் 20 சதவீதம் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
ஆனால் 1 செ.மீ அளவு வளர்ந்துவிட்டால் வெளியேறுவது சிரமம் தான். எனவே அதற்கான சிகிச்சை வகைகளை பார்ப்போம்
லித்தோட்ரைப்ஸி(lithotripsy): கற்களின் அளவு மற்றும் அதனின் அமைப்பிடம் ஆகியவற்றை பொறுத்து லித்தோட்ரைப்ஸி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
ஒரு வித அதிர்வு அலைகளை உருவாக்கி அதன் மூலம் சிறு நீரகத்தில் உள்ள கற்களை சிறிது சிறிதாக பிரிக்கப்படும். பின்னர் அவைகள் எளிதாக சிறுநீருடன் உடலில் இருந்து வெளியேறிவிடும். எனினும் இந்த சிகிச்சையின் போது வழி ஏற்படும் என்பதால் மயக்க மருந்து தரப்படுகிறது.
அறுவை சிகிச்சை: லித்தோட்ரைப்ஸி சிகிச்சையால் குணப்படுத்த முடியாமல் போனால் நெப்ரொலித்தொதோமி(Nephrolithotomy) என்னும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதாவது சிறிய அளவிலான டெலெஸ்கோப் மற்றும் சில கருவிகளை பயன் படுத்தி அறுவை சிகிச்சை மூலம் கற்கள் வெளியேற்றபடுகின்றன.
லேசர் லித்தொட்ரைப்ஸி(Laser lithotripsy) : அளவில் பெரியதாக இருக்கும் கற்களை கரைப்பதற்கு இந்த சிகிச்சையே சிறந்த முறையாகும்.
இந்த வகை சிகிச்சையில் மிக நுண்ணிய கமெராவை உடலின் உள் செலுத்தி கற்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர். பின்னர் லேசர் மூலம் கற்களை ஆயிரமாயிரம் சிறிய கற்களாக பிரிக்கின்றனர். பின்னர் அவை எளிதான சிறுநீரோடு வெளியேறி விடுகின்றன
Tuesday 23 June 2015
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது எப்படி? இதோ சூப்பர் டிப்ஸ்
Posted by
Unknown on 06:33
Be The First To Comment
பெண்களுக்கு அவர்களின் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
இவற்றை அகற்ற பல சிகிச்சைகள் இருக்கின்றன. லேசர் சிகிச்சைகளும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கின்றன. ஆனால் அத்தகைய அதிநவீன சிகிச்சையால் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.
மேலும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண சந்தைகளில் பல்வேறு hair remover, losans ஆகியவை விற்கப்படுகின்றன. ஆனால் இதன் மூலம் ஏற்படும் பக்கவிளைவுகளை மனதில் கொள்ள வேண்டும்.
பிறகு என்ன தான் செய்ய வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இயற்கையான முறையே எப்போதும் சிறந்தாக இருக்கும்.
மஞ்சளின் மகிமையை அறியாதவர்கள் யாரும் இல்லை. இது முகத்தில் மட்டுமல்ல கை, கால்களில் இருக்கும் முடிகளை நீக்க பயன்படுகிறது.
தேவையற்ற முடிகளை நீக்க:
* கஸ்தூரி மஞ்சளை பாலாடையுடன் சேர்த்து முகத்தில் பூசி வர, முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் மறையும். கஸ்தூரி மஞ்சள் மூலிகை கடைகளில் அரைத்தே விற்பனை செய்யப்படுகிறது.
* மஞ்சளுடன் பப்பாளிக்காயை அரைத்து முகத்தில் தடவி வந்தால் தேவையற்ற முடிகள் உதிர்ந்து முகம் பொலிவு பெறும்.
* பசும்பாலுடன் பாசிப்பயறு தோலை கலந்து அரைத்து கொள்ளவேண்டும். பிறகு அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து முகத்தில் தடவி வந்தால் முகத்தில் இருக்கும் முடிகள் மறைந்து முகம் பளபளக்கும்.
* சாதாரண மஞ்சளை இரவு தூங்கும் போது அரைத்து முகத்தில் பூசிக் கொண்டு, காலை இளஞ்சூடான நீரில் கழுவி வந்தால் படிப்படியாக முகத்தில் இருக்கும் முடிகள் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.
Sunday 21 June 2015
சீரகத்தின் மகத்தான மருத்துவ குணங்கள்
Posted by
Unknown on 05:13
Be The First To Comment
சீரகம் பல்வேறு விதமான வியாதிகளுக்கு தீர்வாக அமைகிறது.சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும். எடையும் குறையும்.சீரகத்தையும், உப்பையும் சேர்த்து தண்ணீர் குடித்தால் வயிற்றுவலிக்கு உடனடியாக தீர்வு தரும்.
சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று சாப்பிட்டால் இருமல் போகும். சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும்.
சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நின்றுவிடும். சீரகத்தை மென்று சாப்பிட்டாலே வயிற்று வலி நீங்கி செரிமானம் நன்றாக ஏற்படும்.
சீரகப்பொடியோடு எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்து சாப்பிட்டால் பித்தம் அகலும்.
நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டு காய்ச்சி எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும். சீரகப்பொடியோடு தேன், உப்பு, நெய் சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறிந்துவிடும்.
சீரகத்தை வறுத்து சுடுநீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும். மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம் மந்தம் நீங்கும்.
சீரகம் வில்வவேர்ப்பட்டை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து காலையில் குடித்து வர பலம் கூடும்.
சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை சேர்த்து தூளாக்கி வைத்துக்கொள்ளவும்.
இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும். சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும்.
நரம்புத்தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன் இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு தம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்று பொருமல் வற்றி நலம் பயக்கும்.
சீரகத்துடன் மூன்று பற்கள் பூண்டு வைத்து நன்றாக அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து நன்றாக அரைத்து எலுமிச்சை சாறில் சேர்த்து பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.
சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும். கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடி செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
Subscribe to:
Posts (Atom)